2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

இராணுவம், பொலிஸார் வெளியேற வேண்டுமென பிரேரணை நிறைவேற்றம்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

வவுனியாவில் தனியார் காணிகளில் தங்கியுள்ள இராணுவம், விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் அந்தக் காணிகளிலிருந்து வெளியேறவேண்டும் என வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. 

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற போது, சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் இந்தப் பிரேரணையை முன்வைத்தார்.

அவர் உரையாற்றுகையில். 

'செட்டிக்குளம் விசேட அதிரடிப்படையினரின் முகாமுக்கு அருகில் வேப்பம் இலை பிடுங்கச் சென்ற கந்தசாமி இராஜேஸ்வரி என்ற பெண், முகாமின் வேலியிலிருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். யுத்தம் முடிவடைந்து 6 வருடங்கள் ஆகியும் வேலியில் ஏன் மின்சாரம் பாய்ச்சி வருகின்றார்கள் என்று தெரியவில்லை. அவர்களின் முகாம் அமைந்துள்ளது தனியார் காணியில் ஆகும். தபாலகம், நெற்சந்தை, கலாச்சார மண்டபங்கள், தனியார் காணிகள் என்பவற்றில் இருக்கும் இவர்கள் அங்கிருந்து வெளியேறவேண்டும்' என்றார்.

இந்தப் பிரேரணை உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேறியது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .