Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 29 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.தபேந்திரன்
கிளிநொச்சி, இரணைமடுக் குளத்துக்கு அருகில் உணவு உற்பத்திக்கான தேசிய வேலைத்திட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் ரோகண கீர்த்தி திசாநாயக்க அறிவித்துள்ளார்.
நிலையான நாடு கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட பாதுகாப்பான உணவு மற்றும் நிலையான விவசாயம் எனும் எண்ணக்கருவின் கீழ், உணவு உற்பத்தியில் நாட்டை தன்னிறைவு அடையச் செய்தல் மற்றும் அவ்வுணவு இறக்குமதிக்கென செலவாகும் வெளிநாட்டு செலவாணியை நாட்டினுள் சேமித்துக் கொள்ளும் நோக்குடன் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 2016 - 2018ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த அங்குரார்ப்பண நிகழ்வுக்கு கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பதவிநிலை உத்தியோகத்தர்கள் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
8 hours ago