Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
வண்ணார்பண்ணை பகுதியைச் சேர்ந்த நபரொருவர், ஒருவித காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று திங்கட்கிழமை (14) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவராசா அமுதகடேஸ்வரன் (வயது 54) என்பவரே, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
ஐயப்ப விரதம் அனுஷ்டித்திருந்த இவர், கடந்த 7ஆம் திகதி இந்தியாவுக்குச் சென்றுவிட்டு 12ஆம் திகதி இலங்கைக்குத் திரும்பி வந்தார். திரும்பி வந்த நாளிலிருந்து ஒருவித காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இவர், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார்.
இந்நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளார். நீதிமன்ற உத்தரவுக்கமைய, உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
25 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago
3 hours ago