2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கஞ்சாவுடன் இருவர் கைது

Editorial   / 2018 செப்டெம்பர் 26 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

காங்கேசன்துறை கடற்பரப்பில், கஞ்சா போதைபொருளை உடமையில் வைத்திருந்த இருவரை, கடற்படையினர் நேற்று (25) கைதுசெய்துள்ளனர். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து 28 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட இருவரும் வடமராட்சி கிழக்கைச் சேர்ந்தவர்களென, கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

காங்கேசன்துறை கடற்பகுதியில், நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், கடலில் சந்தேகத்துக்கு இடமான முறையில் பயணித்த படகை மறித்து சோதனை செய்தபோதே, இவ்விருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X