2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கஞ்சாவுடன் இருவர் கைது

Niroshini   / 2016 ஜனவரி 21 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், மடத்தடி பகுதியில் இரண்டு கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா பொதிகளுடன் இருவரை, புதன்கிழமை (20) இரவு கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டி ஒன்றில் கஞ்சா பொதிகள் கடத்தப்படுவதாக கிடைக்கபெற்ற இரகசிய தகவலையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், முச்சக்கரவண்டியொன்றை சோதனையிட்டபோதே, மறைத்து வைக்கபட்ட கஞ்சா பொதியை மீட்டதுடன், சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும், குருநகர் மற்றும் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 32 வயதுடைய நபர்கள் என பொலிஸார் கூறினார்.

இவ்வாறு மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி, 5 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X