2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

கஞ்சாவுடன் மீனவர் கைது

Menaka Mookandi   / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

கொடிகாமம், கெற்பேலி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 48 வயதுடைய மீனவர் ஒருவரை புதன்கிழமை (23) இரவு கைது செய்ததாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி நபர், இரவு வேளைகளின் கஞ்சா விற்பனையில் ஈடுபடுகின்றார் என சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சிவில் உடையில் அவரின் பின்னால் சென்ற பொலிஸார், சந்தேகநபரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து 4 கிராம் கஞ்சா மீட்கப்பட்டது.

கடற்கரையில் நின்று கஞ்சா விற்பனை செய்யும் நடவடிக்கையில் இவர் நீண்டகாலமாக ஈடுபட்டுள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்தது.

சந்தேகநபரை சாவகச்சேரி நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கெற்பேலி கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியென்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X