2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கஞ்சா வைத்திருந்தவருக்கு அபராதம்

Niroshini   / 2016 ஜனவரி 19 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஜே.பிரபாகரன் திங்கட்கிழமை (18) தீர்ப்பளித்தார்.

கிளிநொச்சிப் பகுதியில் 1,020 மில்லிக்கிராம் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரைக் கைது செய்த கிளிநொச்சிப் பொலிஸார், அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து. நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

இதேவேளை 8,120 மில்லிக்கிராம் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை கைது செய்து அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்த கிளிநொச்சிப் பொலிஸார் குறித்த நபரை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் திங்கட்கிழமை ஆஜர்படுத்தினர்.

இதன்போது, குறித்த நபரை 10 ஆயிரம் ரூபாய் காசுப்பிணையிலும் கிராம அலுவலர் உறுதிப்படுத்திய 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையிலும் செல்லுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X