2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கடத்தப்பட்ட பெண் மீட்பு; கணவன் உட்பட 9 பேர் கைது

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வல்வெட்டித்துறை கம்பர்மலை பகுதியில் புதன்கிழமை (14) கடத்தப்பட்ட குடும்பப் பெண், நேற்று வியாழக்கிழமை (15) காலை புத்தூர் பகுதியிலுள்ள சட்டதரணி ஒருவரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்கு காரணமான அவரது கணவர் உட்பட 9 பேரை வல்வெட்டித்துறை இரகசிய பொலிஸார் கைது செய்துள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்கு பொறுப்பான உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

பருத்தித்துறை நீதிமன்றில் இடம்பெற்று வரும் தாபரிப்பு வழக்கு நடவடிக்கைக்கு தாயாருடன் சென்று விட்டு திரும்பிய இ.ஜானகி (வயது 32) என்ற குடும்பப் பெண்ணை வெள்ளை வானில் வந்த கும்பல், கம்பர்மலை பகுதியில் வைத்து புதன்கிழமை (14) கடத்திச் சென்றிருந்தது.

சம்பவம் தொடர்பில் பெண்ணின் தாயார், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டினை அடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரீ.எஸ்.மீடின் தலமையிலான இரு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

இதனையடுத்து கடத்தப்பட்ட பெண், புத்தூர் பகுதியிலுள்ள சட்டத்தரணியொருவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து விரைந்து நடவடிக்கை எடுத்த பொலிஸார், அவரை மீட்டனர்.

இக்கடத்தலுக்கு கணவர் 25,000 ரூபாய் கூலியாக கொடுத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்தவர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், குறித்த நபர்களை பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X