2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கடலட்டை பிடித்தவர்களுக்கு அபராதம்

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 07 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-    செல்வநாயகம் கபிலன்

அனுமதிப்பத்திரமின்றி வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் கடலட்டை பிடித்த மற்றும் கடலட்டையை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டுக்களில் ஐந்து பேருக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா இன்று  புதன்கிழமை (07) தீர்ப்பளித்தார்.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புத்தளம் பகுதியைச் சேர்ந்த இந்த ஐந்து மீனவர்களும், நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அதிகாரிகளால், மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போது, கடலட்டை பிடியில் ஈடுபட்ட மூவருக்கு தலா 5 ஆயிரம் ரூபாயும், கடலட்டையை உடமையில் வைத்திருந்த இருவருக்கு தலா 7500 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X