2025 ஜூன் 25, புதன்கிழமை

கண் சத்திரசிகிச்சைக்காக கண்டிக்குச் செல்லும் யாழ்.வாசிகள்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

யாழ்ப்பாணத்தில் கண் சத்திரசிகிச்சை போதிய திருப்தியில்லாமல் இருப்பதால் பெருமளவான மக்கள் கண்டிக்குச் செல்கின்ற நிலைமை அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் இதர தனியார் வைத்தியசாலைகளிலும் கண் சிகிச்சை மற்றும் கண் சத்திரசிகிச்சை என்பன இடம்பெறுகின்றன. எனினும், ஒப்பீட்டளவில் யாழ்ப்பாணத்தில் கண் சத்திரசிகிச்சை நிபுணர்கள் குறைவாகவுள்ளனர்.

இதனால், யாழ்;ப்பாணத்தில் கண் சத்திரசிகிச்சை செய்பவர்கள் பலர் கண்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றுக்கு செல்கின்றனர். சத்திரசிகிச்சைக்கான கட்டணம் குறைவு, நம்பிக்கைத் தன்மை, சிகிச்சை முறையிலுள்ள நேர்த்தி ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு அங்கு செல்வதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 

கண்டியிலுள்ள இந்துக் கலாசார திணைக்களத்தினால் நடத்தப்படும் விடுதியொன்றில் தங்கியிருந்து பொதுமக்கள் கண் சத்திரசிகிச்சையை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .