2025 ஜூன் 25, புதன்கிழமை

கத்தி வெட்டுக்குள்ளானவர் வைத்தியசாலையில்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 11 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அச்சுவேலி தோப்புப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை தந்தையின் கத்திக் வெட்டுக்கு இலக்காகிய மகன் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தை சேர்ந்த ஜெயபரன் செந்தூரன் (வயது 24) என்பவரே கழுத்தில் வெட்டுக்காயம் பட்டு படுகாயமடைந்தார்.

தந்தைக்கும் தாய்க்கும் இடையில் சண்டை இடம்பெற்ற வேளையில் அதனை தடுப்பதற்கு மகன் சென்றபோது, தந்தை கத்தியால் மகனை வெட்டியுள்ளார்.

படுகாயமடைந்த மகன் முதலில் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்;ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். சம்பவத்துடன் தொடர்புடைய தந்தை தலைமறைவாகியுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .