2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கர்ப்பிணிப் பெண்ணின் சடலம் நீரேரியிலிருந்து மீட்பு

Gavitha   / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த கர்ப்பிணிப் பெண், தொண்டமானாறு கடல் நீரேரியில் ஞாயிற்றுக்கிழமை (20) சடலமாக மீட்கப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

3ஆம் சந்தி தொண்டமானாறு பகுதியைச் சேர்ந்த, அரசன் சந்திரவதனா (வயது 40) என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (18) குறித்த கர்ப்பிணிப் பெண் காணாமல் போன நிலையில், அவருடைய உறவினர்கள் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். காணாமல் போனவர் 5 மாத கர்ப்பிணி என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை (20) காலை செல்வசந்நிதி ஆலயத்துக்கு வந்த அடியவர்கள், பெண் ஒருவரின் சடலம் கரையொதுங்கி இருப்பதை அவதானித்து, தகவல் வழங்கியதையடுத்தே, சடலம் மீட்கப்பட்டதாக தெரிவித்த பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .