Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 09 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள பின்தங்கிய கிராமங்களில் வாழும் மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, இலவச மாலை நேரக்;கற்றல் நிலையங்களை ஏற்;படுத்தித் தருமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேசச் செயலர் பிரிவின் கீழ், கல்லாறு, பிரமந்தனாறு, புன்னைநீராவி, சிவபுரம், கோரக்கன்கட்டு, ஊரியான் உள்ளிட்ட பின்தங்கிய பிரதேசங்களில் இருக்கின்ற ஏராளமான சிறார்கள், பாடசாலைக் கல்வியை மட்டும் பயின்று வருவதுடன், அவர்களின் பாடசாலைகக்கான வரவு மிகக்குறைவாகவே காணப்படுகின்றது.
இதனால், மாணவர்களுடைய கல்வி மற்றும் எழுத்தறிவு மிக மோசமாக காணப்படுகின்றது.
அவர்களுடைய கல்வி அறிவை மேம்படுத்துவதற்கு தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்வதற்கோ அல்லது மேலதிக கல்வியைத் தொடர வைப்பதற்கோ மாணவர்களின் குடும்பத்துக்கு போதிய வருமானம் கிடைப்பதில்லை.
ஆகவே, இவ்வாறான விடயங்களை கவனத்தில் கொண்டு, மாலை நேர கற்றல் நிலையங்களை அமைத்து, சிறார்களின் கல்வி மேம்படுவதற்கு வழிவகுக்குமாறு பெற்றோர், கோரிக்;கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
42 minute ago