2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கலாசார மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டு விழா

Kogilavani   / 2015 ஒக்டோபர் 11 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வலி வடக்கு மாவிட்டபுரம் மேற்கு கிராம அலுவலர் பிரிவில் அமைக்கப்படவுள்ள கலாசார மண்டபத்துக்கான அடிக்கல்லை யாழ்மாவட்ட செயலர் நாகலிங்கன் வேதநாயகன் ஞாயிற்றுக்கிழமை (11) நாட்டினார்.

அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 25 இலட்சம் ரூபாய் நிதியில் கலாசார மண்டபத்துக்கான முதற் கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வலி வடக்கு பிரதேச செயலாளர் க.ஸ்ரீமோகனன் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய பிரதம குரு மகாராஜஸ்ரீ ச.இரத்தினசபாபதிக் குருக்கள் மற்றும் தெல்லிப்பழை உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.பிரபாகரமூர்த்தி உட்பட மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X