2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கலைப்பீட விரிவுரைகள் இடைநிறுத்தம்

George   / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.நேசமணி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் 3 ஆம் மற்றும் 4 ஆம் வருட மாணவர்களின் விரிவுரைகள், இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் விடுதிகளில் தங்கியுள்ள இந்த மாணவர்கள் உடனடியாக வெளியேறவேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பதிவாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைநிறுத்தப்பட்டதுக்கான சரியான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருந்தும் கடந்த வாரத்தில் கலைப்பீட 3 ஆம் மற்றும் 4 ஆம் வருட மாணவர்களுக்கிடையில் நடைபெற்று வந்த கைகலப்பின் எதிரொலியாகவே இந்த விரிவுரைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரிவுரைகள் மீள ஆரம்பிக்கும் திகதி அறிவிக்கப்படவில்லை.

கைகலப்பில் ஈடுபட்ட மாணவர்கள் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணைகள் நடைபெறுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் கூறியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .