2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கூல், கட்சியொன்றுக்கு ஆதரவாக செயற்பட்டாரா?

Editorial   / 2018 ஜனவரி 31 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் கட்சியொன்றுக்கு ஆதரவான போக்கில் செயற்பட்டுள்ளாரா? என ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன் தேர்தல் ஆணைக்குழுவுக்கு நேற்று (30) உத்தரவிட்டார்.

தமிழ்தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடும் அமைப்பு ஒன்று தேர்தல் விதிமுறைகளை மீறி மாவட்டபுரம் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுட்டிருந்ததாகவும், அது தொடர்பாக பொலிஸார் உரிய விசாரணைகளை நடாத்தவில்லை எனவும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ரட்ணஜீவன் கூல் பிரதி பொலிஸ்மா அதிபர் ஊடாக முறைப்பாடு தெரிவித்திருந்தார்.

குறித்த வழக்கு நேற்று (30) நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .