2025 ஜூன் 23, திங்கட்கிழமை

கைக்குண்டு மீட்பு

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பருத்தித்துறையில் இருந்து தும்பளைக்கு செல்லும் பகுதியிலுள்ள வாய்க்கால் கழிவுக்குள் இருந்து நேற்று வியாழக்கிழமை (03) கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

வாய்க்கால் கழிவு துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த நகர சபை ஊழியர்கள் கைக்குண்டு இருப்பதனைக் கண்டு, இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு பொலிஸாருடன் வந்த இராணுவத்தினரின் குண்டு செயழிலக்கும் பிரிவினர் மேற்படி கைக்குண்டை மீட்டு சென்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .