2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

குடாக்கடலில் மீன்பிடிக்க 45 நாட்கள் தடை?

George   / 2016 பெப்ரவரி 05 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

யாழ்ப்பாணத்தின் குடாக்கடல் பகுதியில் தொழில் செய்வதற்கு 45 நாட்கள் தடை விதித்து, மீனின் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மீன்களின் இனப்பெருக்கக் காலத்தில் கடலுக்கு 45 நாட்கள் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடாமல் இருக்கும் சட்டம் இந்தியாவில் நடைமுறையில் உள்ளது.

தீவுப் பகுதியிலிருந்து பண்ணைப் பகுதி வரையிலும் அதிகளவான கலங்கட்டிகள் போடப்பட்டுள்ளன. இந்தக் கலங்கட்டிகளால் மீன்களின் இனப்பெருக்கமான பாதிக்கப்படுகின்றது. அந்த கலங்கட்டிகளைத் தாண்டியே காக்கைதீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு மீன்கள் வரவேண்டியுள்ளது. 
 
அத்துடன், குடாக்கடலில் மீன்களின் படுகைகளும் குறைந்துள்ளன. இதனைக் கருத்திற்கொண்டு, மீன்பிடிக்க 45 நாட்கள் தடை விதிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதற்கான விடயங்கள் தொடர்பில் அண்மையில் நடைபெற்ற வலிகாமம் தென்மேற்கு சண்டிலிப்பாய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் யாழ். மாவட்ட கடற்றொழில் சம்மேளனத்தைச் சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X