2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கொடிகாமம் விபசார விடுதி வழக்கு: மூவர் பிணையில் விடுதலை

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கொடிகாமம் நகரப்பகுதியில் விருந்தினர் விடுதி என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதியில் கைதான வவுனியாவைச் சேர்ந்த பெண் உட்பட மூவரை தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன், நேற்று வெள்ளிக்கிழமை (16) அனுமதியளித்ததாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்தி வைத்த நீதவான், சாவகச்சேரி நகரசபையினால் சீல் வைத்து மூடப்பட்ட குறித்த விடுதிக்குள் எந்த வகையிலும் யாரும் உள் நுழையக்கூடாது என உத்தரவிட்டார்.

கடந்த ஜுலை மாதம் இவ்விடுதியில் சட்டவிரோத விபசாரம் இடம்பெறுவது தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இவ்விடுதியினை முற்றுகையிட்டனர். இதன்போது விடுதி உரிமையாளர் மற்றும் உதவியாளர் உட்பட வவுனியாவைச் சேர்ந்த பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

தவணை முறையில் இடம்பெற்ற வழக்கு விசாரணை, நேற்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதவான் பிணையில் செல்ல அனுமதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X