2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கொட்டதெனியாவ சிறுமிக்காக பேரணி

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கொட்டதெனியாவ பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட ஐந்து வயது சிறுமியான செயா சந்தவமி, வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அளவெட்டி விநாயகர் விளையாட்டுக்கழக இளைஞர்களால் செவ்வாய்க்கிழமை (22) எதிர்ப்புப் பேரணியொன்று நடத்தப்பட்டது.

அளவெட்டி விநாயகர் விளையாட்டுக்கழகத்திலிருந்து ஆரம்பமான இந்தப் பேரணி தெல்லிப்பழை பிரதேச செயலகம் வரையில் நடைபெற்றது.

தொடர்ந்து பிரதேச செயலர் கே.ஸ்ரீமோகனிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், வல்வெட்டித்துறை நகர சபை முன்னாள் உறுப்பினர் கந்தசாமி சதீஸ் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .