2025 ஜூன் 30, திங்கட்கிழமை

குடும்ப பெண் கடத்தலில் 10ஆவது சந்தேகநபருக்கும் விளக்கமறியல்

Gavitha   / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

வல்வெட்டித்துறை கம்பர்மலைப்பகுதியில் குடும்ப பெண் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான, உடுப்பிட்டி பொக்கணைப் பகுதியைச் சேர்ந்த பத்தாவது சந்தேக நபரை (வயது 27), எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா சனிக்கிழமை (17) உத்தரவிட்டார்.

கடந்த 14ஆம் திகதி, நீதிமன்றத்துக்கு தாபரிப்பு வழக்குக்காக சென்ற பின்னர், வீடு திரும்பிய பெண்ணை, அவரது கணவர் கூலியாட்களை வைத்து கடத்தியிருந்தார்.

இச்சம்பவத்தில் விசாரணைகளை மேற்கொண்ட வல்வெட்டித்துறை பொலிஸார், பெண்ணின் கணவன் உட்பட 9 பேரை கைது செய்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது,  நீதவான், அவர்களை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் கடத்தலுக்கு திட்டங்களை வகுத்து கொடுத்த குற்றச்சாட்டில் கைதான 10ஆவது சந்தேக நபர், வெள்ளிக்கிழமை (16) இரவு கைது செய்யப்பட்டு நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது, 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X