Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 பெப்ரவரி 02 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி கண்டாவளைப் பகுதியில் இளம் குடும்பப் பெண் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட முதலாவது சந்தேக நபரை கடும்நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் செல்ல கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஜே.பிரபாகரன், நேற்று திங்கட்கிழமை (01) அனுமதித்தார்.
ஏனைய நான்கு சந்தேக நபரையும் தொடர்ந்து எதிர்வரும் 15ஆம் திகதிவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
கிளிநொச்சி, கண்டாவளை பகுதியில் கடந்த மாதம் இரண்டு பிள்ளைகளின் தாயாரான இளம் குடும்பப் பெண்ணை கடத்த முற்பட்ட 5 சந்தேகநபர்களை கைது செய்த கிளிநொச்சி பொலிஸார் அவர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போது நீதவான் திங்கட்கிழமை (01) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
05 சந்தேகநபர்கள் திங்கட்கிழமை (01) மீண்டும் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது குறித்;த சம்பவத்துடன் தொடர்புபட்ட முதலாவது சந்தேகநபரை கடும் நிபந்தனைகளுடன் கூடிய 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையில் செல்ல அனுமதித்ததுடன், ஏனைய நான்கு சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
8 minute ago
49 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
49 minute ago
59 minute ago
1 hours ago