2025 ஜூன் 28, சனிக்கிழமை

கிணற்றிலிருந்து பெண்ணின் சடலமாக மீட்பு

Gavitha   / 2015 ஒக்டோபர் 01 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

நீரிவேலி பகுதியிலுள்ள தோட்டக்கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலத்தை வியாழக்கிழமை (01) மீட்டதாக,  அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தைச் சேர்ந்த மோகன் விஜயமாலா (வயது 41) என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புதன்கிழமை (30) இரவு நித்திரைக்கு சென்றவர், அதிகாலை காணாமல் போயுள்ளார். அதனைத் தொடர்ந்து நடத்திய தேடுதலின் பின்னர்.  போது, வீட்டிலிருந்து 200 மீற்றர் தொலைவிலுள்ள கிணற்றிலிருந்து குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்துக்குச் சென்ற மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி, சடலத்தை பார்வையிட்ட பின்னர், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலத்தை போதனா வைத்தியசாலைக்கு அனுப்புமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .