2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கிணற்றில் வீழ்ந்து வயோதிபப் பெண் உயிரிழப்பு

Princiya Dixci   / 2016 ஜனவரி 20 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கிணற்றில் நீர் எடுக்கச் சென்ற வயோதிபப் பெண்ணொருவர், கிணற்றில் தவறுதலாக வீழ்ந்து இன்று புதன்கிழமை (20) உயிரிழந்துள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர், சகாயபுரம் மாதகல் பகுதியினை சேர்ந்த இலங்கையன் இலட்சுமி (வயது 84) என பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X