2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

காணி ஆவணங்களை வழங்குவதற்கான நடமாடும் சேவை

Gavitha   / 2016 ஜனவரி 22 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி அக்கராயன் கிராம அலுவலகர் பிரிவில், நேற்று  வியாழக்கிழமை (21) கரைச்சி பிரதேசச் செயலகத்தினால் காணிகளுக்கான ஆவணங்களை வழங்குவதற்கான நடமாடும் சேவையொன்று நடைபெற்றது.

கரைச்சி பிரதேச செயலகத்தின் அதிகாரிகளினால் நடத்தப்பட்ட இந்த  நடமாடும் சேவையில், 176 பேர் காணி ஆவணங்களைப் பெறுவதற்கான பதிவுகளை மேற்கொண்டிருந்தனர்.

இடம்பெயர்வு காலத்தில் பலர் தங்களுடைய காணி ஆவணங்களை இழந்துள்ள நிலையில் மீள் குடியேற்றத்தின் பின்னர் காணி ஆவணங்களை வழங்குவதற்காகவே இம் நடமாடும் சேவை இடம்பெற்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X