2025 ஜூன் 25, புதன்கிழமை

குருதிச் சோகையுடைய குழந்தைகளுக்கு மருத்துவ உதவி

Kogilavani   / 2015 செப்டெம்பர் 11 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

வேலணைப் பகுதியில் இனங்காணப்பட்ட குருதிச் சோகையுடைய 5 வயதுக்குட்பட்ட 30 குழந்தைகளுக்கு சங்கானை லயன்ஸ் கழகத்தால் மருத்துவ உதவிகள் புதன்கிழமை (09) வழங்கப்பட்டது.

சங்கானை லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் லயன் டாக்டர் க.ஜெயச்சந்திரமூர்த்தியின் வழிகாட்டலில் வேலணை பிராந்தி சுகாதாரப் பணிமனையில் இடம்பெற்ற நிகழ்வில் மேற்படி குழந்தைகளுக்கு இரும்புச் சத்துள்ள ஊட்ட மருந்துகள் வழங்கப்பட்டன.

தீவக பிராந்திய சுகாதார வைத்தியதிகாரி லயன் டாக்டர் எஸ்.குகதாசன், சங்கானை லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன் ஜெ.றஜீவன், நிகழ்ச்சித் திட்டத் தலைவர் லயன் பெண்மணி மயூரிக்கா ரஜீவன், மருத்துவர்கள் அ.ஜெயக்குமார், லயன் பெண்மணி மேரி மெற்லின் மற்றும் வேலணைப் பிரதேசத்தில் வசிக்கும் பயனாளிகள் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .