2025 ஜூன் 28, சனிக்கிழமை

கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளக்கூட்டம்

Gavitha   / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடற்றொழில் அமைச்சினால் கடந்த செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி அனுப்பப்பட்ட கடிதத்தின் அறிவுறுத்தலுக்கமைவாக,  யாழ்.மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டிலான கூட்டம், எதிர்வரும் 16ஆம் திகதி காலை 10 மணிக்கு, யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள பணிமனையில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில், தொழிலாளர்களுக்குரிய மானியம், துறைமுகம், இறங்குதுறை, வான் தோண்டுதல், கலங்கரை விளக்குகள், கடற்றொழில் உபகரணங்கள் மற்றும் அடிப்படைத் தேவைகள் சம்பந்தமாக ஆய்வுசெய்து, தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

மேலும், மேற்குறிப்பிட்ட தேவைகளில், தங்களுடைய உறுப்பினர்களுக்கும் துறைகளுக்கும் தேவையானவற்றை தெரிவுசெய்;து, அதனை வேண்டுகோள் கடிதமாக தயாரித்து கிராமிய கடற்றொழில் சங்கங்கள் கையளிக்கலாம் என, யாழ்.மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் என்.பொன்னம்பலம் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .