2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

குளத்தில் மூழ்கி யுவதி உயிரிழப்பு

George   / 2017 ஜனவரி 09 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வேலணை மேற்கு சங்கத்தார் கேணிக்குளத்தில் நண்பிகளுடன் குளிக்க சென்ற யுவதி, நீரில் மூழ்கி இன்று மதியம் உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தை சேர்ந்த சுரேஸ் வினோஜா (வயது 16) என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.

நீரில் மூழ்கியவரின் சடலம் மீட்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

குளித்துக்கொண்டிருந்த போது யுவதி, ஆழமான பகுதிக்கு சென்றதன் காரணமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X