2025 ஜூன் 25, புதன்கிழமை

கிளிநொச்சியில் தனியார் பஸ் நிலையம்

Gavitha   / 2015 செப்டெம்பர் 15 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி நகரில் தனியார் பஸ் நிலையம் அமைப்பதற்கான காணி ஒதுக்கப்பட்டு, பஸ் நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம், செவ்வாய்க்கிழமை (15) தெரிவித்தார்.

வடமாகாணத்தில் பெரிய மாவட்டங்களில் ஒன்றாகவுள்ள கிளிநொச்சி மாவட்டத்துக்கு பஸ் நிலையம் ஒன்று இல்லாமை பெரும் குறையாகவிருந்தது. பஸ் நிலையம் அமைப்பதற்கான நிதி கிடைக்கப்பெற்றிருந்தும், பஸ் நிலையம் அமைப்பதற்கான காணி தொடர்பில் எழுந்த பிரச்சினைகளால் இதுவரையில் பஸ் நிலையம் அமைக்கப்படவில்லை.

கடந்த 2009ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் முதல், மீள்குடியமர்வதற்கு அனுமதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தில் பஸ் நிலையம் ஒன்று இல்லாமையால், தனியார் மற்றும் அரச சேவையினர் பல சிரமங்கள் ஏற்பட்டதுடன், அவர்களுக்கிடையில் அடிக்கடி பிரச்சினைகளும் ஏற்பட்டன.

தீர்க்கப்படாமல் இழுபறிபட்டுக்கொண்டிருந்த இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக தனியார் பஸ் நிலையம் அமைப்பதற்கு கிளிநொச்சி நகரத்திலுள்ள அரச காணியொன்று ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது, அமைப்பதற்கான திட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் பஸ் நிலையம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என மாவட்டச் செயலர் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .