2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகள் தொடர்கின்றன

Gavitha   / 2015 நவம்பர் 29 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு கடல் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சட்டவிரோத கடற்றொழில்களை தடுத்து நிறுத்துவதற்கு, இதுவரை எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இதனால் தங்களுடைய தொழில் பாதிக்கப்படுவதாக இப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்;தீவு மாவட்டத்தின் பேப்பாறைப்பிட்டி தொடக்கம் நல்லதண்ணீர்;தொடுவாய் வரைக்குமான 73 கிலோமீற்றர் நீளமான கரையோரப்பகுதிகளிலும் இதை விட நாயாறு, கொக்குளாய் ஆறு, நந்திக்கடல் உள்ளிட்ட சிறுகடல் பகுதிகளிலும் சுமார் 4,500க்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள், கடல்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சிறுகடல் பகுதிகளில் பாரம்பரிய மீன்பிடிமுறைகளுக்கு அப்பால் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இதேபோன்று ஆழ்கடல்பகுதிகளிலும் சட்டவிரோத தொழில் நடவடிக்;கைகள் மேற்;கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனால் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தொழில்கள் பாதிக்கப்படுகின்றன.

இந்தச் சட்டவிரோத தொழில்களை கட்டுப்படுத்தி, தமது தொழில் சார் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏற்ற வழி வகைகளை செய்து தருமாறு, இப்பகுதி கடற்றொழிலாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை எதுவிதமான தீர்வுகளும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள கடற்றொழிலாளர்; இதனால் தங்களுடைய தொழில் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .