Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Kogilavani / 2015 செப்டெம்பர் 01 , மு.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
சட்டவிரோத மின்சாரம் பெற்ற ஏழாலை பகுதியைச் சேர்ந்த இருவருக்கு 1 இலட்சத்து 22 ஆயிரம் ரூபாயை அபராதம் மற்றும் நட்ட ஈடாக விதித்து மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி திங்கட்கிழமை (31) தீர்ப்பளித்தார்.
இலங்கை மின்சார சபையின் புலனாய்வு அதிகாரிகளும், சுன்னாகம் பொலிஸாரும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (30) இரவு ஏழாலை பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், ஒரு வீட்டிலிருந்து மற்றைய வீட்டுக்கு திருட்டுத்தனமாக மின்சாரம் வழங்கிய ஒருவரும் மின்மானியில் மாற்றங்கள் செய்து மின்மானியின் ஓட்டத்தைக் குறைத்து மின்சாரம் பெற்ற ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் நேற்று (திங்கட்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது, பிறிதொரு வீட்டுக்கு மின்சாரம் வழங்கியவருக்கு 10 ஆயிரம் ரூபாயும் மின்மானியின் ஓட்டத்தைக் குறைத்து மின்சாரம் பெற்றவருக்கு மின்சார சபைக்கான நட்டஈடு மற்றும் அபராதம் என 1 இலட்சத்து 12 ஆயிரம் ரூபாய் விதிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
22 Jun 2025