2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

சாவகச்சேரியில் பஸ் விபத்து; சாரதி படுகாயம்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 04 , மு.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் நேற்று(03) இரவு 7 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் பஸ் சாரதி படுகாயம் அடைந்துள்ளார்.

 வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று புத்தூர் சந்தி பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது.

இவ்விபத்தினால் பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத நிலையில், பஸ் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

விபத்து இடம்பெறுவதற்கு சற்றுமுன்னர் திடீரென பஸ்ஸின் பிரேக் மற்றும் ஸ்ரேறிங் இயங்கவில்லை என சாரதி தெரிவித்த சில விநாடிகளில் விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X