2025 ஜூன் 26, வியாழக்கிழமை

செய்திப் பணிப்பாளரைத் தாக்கிய வயோதிபருக்கு பிணை

எம். றொசாந்த்   / 2018 ஜனவரி 30 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் டான் தொலைக்காட்சி ஒளிபரப்பு கலையகத்துக்குள் அத்துமீறி நுழைந்து, அந்த நிறுவனத்தின் செய்திப் பணிப்பாளரை தாக்கிய வயோதிபரை பிணையில் செல்ல யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன் இன்று (30) அனுமதியளித்தார்.

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள, டான் தொலைக்காட்சி ஒளிபரப்புக் கலையகத்துக்கு கடந்த 9ஆம் திகத மாலை வயோதிபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து அங்கு பணியிலிருந்த செய்திப் பணிப்பாளரை தாக்கினார்.

இதனையடுத்து, முதியவரை பிடித்த ஊழியர்கள் யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்ததையடுத்து, நீதிமன்ற உத்தரவுக்கமைய குறித்த முதியவர் தெல்லிப்பளை மனநல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று (30) முதியவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது, முதியவரை 2 ஆட்பிணையில் செல்ல அனுமதியளித்த நீதவான், வழக்கு விசாரணைகளை எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .