2025 ஜூன் 28, சனிக்கிழமை

சென்.ஜோன்ஸ் கல்லூரியில் பயிற்சிக் கழக பாடசாலை

Gavitha   / 2015 செப்டெம்பர் 30 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பயிற்சி கழக பாடசாலை, சென்.ஜோன்ஸ் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை (30) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

திறந்த பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.ஏ.அரியதுரை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சென்.ஜோன்ஸ் கல்லூரியின் முகாமையாளரும் பிரதான அதிகாரியுமான வணபிதா எஸ்.ஜே.ஜெயவீரசிங்கன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், சென்.ஜோன்ஸ் கல்லூரி அதிபர் என்.ஜே.ஞானப்பொன்ராஜா, யாழ்ப்பாணம் பயிற்சிக் கழக பாடசாலையின் பணிப்பாளர் எஸ்.கோபிநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .