2025 ஜூன் 25, புதன்கிழமை

சிறுமியின் தங்கச் சங்கிலி அபகரிப்பு

Gavitha   / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

யாழ். பற்றிக்ஸ் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த 15 வயதுச் சிறுமியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை, மோட்டார்  சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் அறுத்துச்சென்றுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்றுள்ளது.

45 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியே இவ்வாறு அறுக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகடு துணி ஒன்றினால் மறைக்கப்பட்டிருந்ததாக சிறுமியின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .