2025 ஜூன் 25, புதன்கிழமை

சிறுவர்களுக்கு சிகரெட் விற்றவர்கள் கைது

Gavitha   / 2015 செப்டெம்பர் 15 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

பாசையூர்ப் பகுதியில் 21 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த 4 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களை, திங்கட்கிழமை (14) மாலை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி வர்த்தகர்கள், சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்வதாகக் கிடைத்த தகவலையடுத்து, இரண்டு சிறுவர்களிடம் பொலிஸார் பணத்தை கொடுத்து சிகரெட் வாங்கி வருமாறு கூறியுள்ளனர். வர்த்தகர்களும் சிறுவர்களின் வயதைக் கவனத்தில் கொள்ளாமல் பணத்தை பெற்றுக்கொண்டு சிகரெட்டை கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து, உடனடியாக வர்த்தகர்களைக் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதுதான நால்வரையும் பொலிஸ் பிணையில் விடுவித்ததுடன், அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக பொலிஸார் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .