2025 ஜூன் 23, திங்கட்கிழமை

சூழலியல் விவசாயக் கண்காட்சி

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 31 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு விவசாய அமைச்சின் 'சூழலியல் விவசாயத்தை நோக்கி' என்னும் தொனிப்பொருளிலான விவசாயக் கண்காட்சி, எதிர்வரும் புதன்கிழமை (02) நல்லூர் கோவில் வீதியில் அமைந்துள்ள மங்கையர்க்கரசி வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

நல்லூர் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சியை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆரம்பித்துவைக்கின்றார்.

அளவுக்கு மிஞ்சிய செயற்கை உரங்களினதும் இரசாயன களைகொல்லிகளினதும் பயன்பாட்டினால் உடல்நலம் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீரும் மாசுபட்டு வருகிறது. விவசாய இரசாயனங்களின் வரம்பு மீறிய பாவனையால் ஏற்பட்டு வரும் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு சூழலுக்கு இசைவான பயிர்ச்செய்கை முறைகள் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் நோக்கோடு இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரசாயன உரவகைகள் மற்றும் பீடைகொல்லிக்கு மாற்றீடாகப் பயன்படுத்தக்கூடிய சேதனப் பசளைகள், சேதன பீடைநாசினிகள், ஒருங்கிணைந்த பீடை முகாமைத்துவம், நிலத்தடிநீர் முகாமைத்துவம், பண்ணை இயந்திரங்கள், அருகிவரும் பயிர்கள், பழங்கள், பாரம்பரியப் பயிரினங்கள், காளான் வளர்ப்பு போன்றவற்றுடன் தொடர்பானவை இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. 

அத்தோடு, நடுகைப் பொருட்கள், சுதேச உணவுப்பொருட்கள் மற்றும் இயற்கைப் பழரசமென்பானங்கள் ஆகியவற்றை விற்பனை செய்வதற்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நல்லூர் 15ஆம் திருவிழாவான புதன்கிழமை ஆரம்பமாகவுள்ள இக்கண்காட்சி, பூங்காவனத் திருவிழா வரையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .