2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

சி.வி.யை சுதந்திரமாகச் செயற்பட விடக் கோரி உண்ணாவிரதம்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 22 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சுதந்திரமாகச் செயற்படுவதற்கு விடுமாறு கோரி கொடிகாமம் வரணிப் பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் துசாந் என்ற தனிநபர் தந்தை செல்வா சதுக்கத்துக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.

வடக்கு முதலமைச்சரை குறை கூறுவதற்கு செலவளிக்கும் நேரத்தை விடுத்து, மக்களுக்கு சேவை செய்வதற்கு அதனைச் செலவளிக்க வேண்டும் என அவர் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அத்துடன், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்ற வேண்டாம் எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X