Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 15 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுகாதார அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தினூடாக டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு, எமது மக்கள் ஒன்றிணைந்து பங்களிப்பை வழங்க வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேசிய ரீதியில் சுகாதார அமைச்சால் டெங்கு கட்டுப்பாட்டு வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில், யாழ்.மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்களுக்குட்பட்ட கிராமங்கள் தோறும் இவ் விழிப்புணர்வு, அறிவூட்டல் செயற்பாடுகளை சுகாதாரத்துறையினர் மேலும் முன்னெடுக்க வேண்டும்.
அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கும் இவ்விடயம் தொடர்பில் உரிய அறிவுறுத்தல் வழங்கப்படுவது அவசியமானது.
குறிப்பாக, மக்கள் தாம் வாழும் வீடுகளையும் அதன் சுற்றாடல்களையும் மட்டுமன்றி அயலிலுள்ள வெற்றுக்காணிகள் உள்ளிட்ட பகுதிகளையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறான செயற்பாடுகளூடாகவே, உயிர்க்கொல்லி நோயான டெங்கை, முழுமையாக அகற்ற முடியுமெனவும் இச்செயற்றிட்டத்தை வெற்றி பெறச் செய்வதற்கு மக்கள் உணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படுவதனூடாக எமது சமூகத்தை நோய்த்தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
டெங்கு கட்டுப்பாட்டு வாரம் இம்மாதம் 10 ம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நாடாளவிய ரீதியில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago
2 hours ago