2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

தர்மம் வழங்காதவர்களுக்கு தகாத வார்த்தை

Gavitha   / 2015 ஓகஸ்ட் 27 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

குணசேகரன் சுரேன்

12 வயது சிறுமியொருவருக்கு கண்ணில் சத்திர சிகிச்சையொன்றை மேற்கொள்வதற்கான வீடு வீடாகச் சென்று நிதிச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்த நபரொருவர், நிதியுதவி வழங்காதோரை தகாத வார்த்தைகளால் ஏசிய சம்பவமொன்று யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வியாழக்கிழமை (27) இடம்பெற்றது.  

சிறுமியொருவர் தொடர்பான விபரங்கள் அடங்கியப் பதிவொன்றுடன் வீடு வீடாக நிதிச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்த மேற்படி நபர், பணம் கொடுக்காதவர்களை ஏசியதுடன், 50 ரூபாய்க்கு குறைவாக பணம் கொடுப்பவர்களையும் அதிக பணம் தருமாறு நச்சரித்துள்ளார்.

மதுபோதையில் வந்தே மேற்படி நபர் நிதிச் சேகரிப்பில் ஈடபட்டதாகவும் குறித்த சிறுமியின் சத்திர சிகிச்சை தொடர்பான எந்தவொரு ஆவணமும் அவரிடம் இருக்கவில்லை என்றும் அவர் மீதான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த பொதுமக்கள் கூறுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .