2025 ஜூன் 26, வியாழக்கிழமை

தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

Editorial   / 2018 பெப்ரவரி 08 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

- டி.விஜிதா

“நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், தேர்தல் கடமையில் 6 ஆயிரத்து 500 அரச உத்தியோகத்தர்கள் அமர்த்தப்பட்டுள்ளதாக” யாழ்.மாவட்ட செயலரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான பாதுகாப்பு மற்றும் வாக்களிப்பு நிலைய ஏற்பாடுகள் தொடர்பில் இன்று (08) யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சனிக்கிழமை (10) நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் 4 இலட்சத்து 68 ஆயிரத்து 476 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிப்பதுக்காக 521 வாக்களிப்பு நிலையங்களும், 243 வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

யாழ்.மாவட்டத்தில் 1 மாநகர சபை உட்பட 3 நகர சபை, 13 பிரதேச சபை அடங்கலாக 17 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் இம்முறை, அந்தந்த வட்டாரங்களில் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறவுள்ளன.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, மத்;திய வாக்கெண்ணும் நிலையமாக செயற்படவுள்ளதுடன், யாழ்.மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்கெண்ணும் நிலையங்களிலிருந்தும் முடிவுகள் பெறப்பட்டு, யாழ்.மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மத்திய வாக்கெண்ணும் நிலையத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும்.

இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் போக்குவரத்துச் சேவையின் பஸ்கள் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அன்றையதினம், தூர இடத்தில் இருந்தும் இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்கள் தமது வாக்குகளை அளிப்பதுக்கு வாக்களிப்பு நிலையத்துக்குச் செல்வதுக்குரிய பஸ் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பொது மக்கள் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை தமது வாக்குகளை அளிக்க முடியும். இரவு 8 மணிக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். பொதுமக்கள் தமது அடையாள அட்டை மற்றும் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையுடன் சென்று தமது வாக்குகளை அளிக்க முடியும்” என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .