2025 ஜூன் 26, வியாழக்கிழமை

தேர்தலை புறக்கணிக்கவுள்ள வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள்

எம். றொசாந்த்   / 2018 பெப்ரவரி 07 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள், அவர்களின் குடும்பத்தினர் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலை புறக்கணிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன் இன்று (07) காலை போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர் ஆசிரியர்களே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

எமக்கான நியமனம் வழங்கப்படும் என பல தடவைகள் உறுதியளிக்கப்படும், இதுவரை நியமனங்கள் வழங்கப்படவில்லை. நாமும் பல தடவைகள் போராட்டத்தில் ஈடுபட்டும் உறுதியளிக்கப்பட்டவாறு நியமனங்கள் வழங்கப்படவில்லை. மத்திய, மாகாண அரசாங்களுக்கு பல மகஜர்களை கையளித்து விட்டோம். எனினும் எமது நிலைமை தொடர்பாக எவரும் கவனமெடுக்கவில்லை. இதனால் நாமும் எமது குடும்பத்தினரும் வறுமையில் வாடுகின்றோம். குடும்பத்தினருடன் உயிரை மாய்த்து கொள்வதை தவிர வேறு வழி எமக்கு தெரியவில்லை.

இதனால் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலை நாமும் எமது குடும்பத்தினரும் புறக்கணிக்க எண்ணியுள்ளோம்.

மேலும், எதிர்வரும் 15ஆம் திகதி 182 தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இது ஒரு தேர்தல் விதிமுறை மீறலாகும். அத்துடன் 182 பேருக்கும் முறைகேடான வகையிலேயே, தேர்தல் கால வாக்குறுதிகளுக்கமைய நியமனம் வழங்கப்படவுள்ளது.

182 பேரில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் பணியாற்றியோரும் உள்ளனர். 624 தொண்டர் ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டு 182 பேருக்கு மட்டுமே நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .