Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2018 மார்ச் 21 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.ஜெகநாதன், எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்
நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கைதடியிலுள்ள வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்துக்கு முன்பாக வடமாகாண தொண்டராசிரியர்கள் இன்று (21) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் கல்வி வலயத்தைச் சேர்ந்த தொண்டராசிரியர் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வடமாகாண முதலமைச்சர் அலுவலகம் முன்பாக வடமாகாண தொண்டராசிரியர்கள் இன்று (21) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வடமாகாணத்திலுள்ள 680 தொண்டராசரியர்களில் 182 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கிய நிலையில், அதில் முறைகேடுகள் இடம்பெற்று உள்ளதாகவும் அதை நிறுத்தி சகல தொண்டராசிரியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்க கோரி, ஏனைய வடமாகாண தொண்டராசிரியர்கள் கடந்த காலங்களில் மேற்கொண்ட போராட்டங்களையடுத்து, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தலையீட்டால் குறித்த நியமனம் நிறுத்தப்பட்டிருந்தது.
இருந்தும், இம்மாதம் மீண்டும் குறித்த 182 பேருக்கும் நியமனம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், முல்லைத்தீவைச் சேர்ந்த குறித்த ஆசிரியர் நேற்று (20) தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து இன்று (21) வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்துக்கு முன்பாக கூடிய தொண்டராசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களை வடமாகாண முதலமைச்சர் அழைத்து சந்தித்ததுடன் விடயம் தொடர்பில் கேட்டறிந்தார். அத்துடன் இவ்விடயம் தொடர்பில் மத்திய கல்வி அமைச்சுக்கு உடன் தெரியப்படுத்தி தாம் பதிலை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
26 minute ago
29 minute ago
45 minute ago