2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

தொண்டைமானாறு கடல்நீரேரியிலிருந்து சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், தொண்டைமானாறு கடல்நீரேரியிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை (29) காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

வல்வெட்டித்துறை, சீனட்டியைச் சேர்ந்த சிவஞானம் சிவலோகநாதன் (வயது 55) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், கடந்த 22ஆம் திகதி தொடக்கம் காணாமற்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே அவரது சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X