2025 ஜூலை 03, வியாழக்கிழமை

தாபரிப்பு பெற்றோர் திட்டத்தின் கீழ் புலமைப்பரிசில்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ். மாவட்டச் செயலகத்தின் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தினால் தாபரிப்பு பெற்றோர் திட்டத்தின் கீழ் 61 பாடசாலை மாணவர்களுக்குரிய சிசுதிரிய புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு, யாழ். மாவட்டச் செயலகத்தில் திங்கட்கிழமை (26) நடைபெற்றது.

இத்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்த்திலுள்ள பிரதேச செயலகங்கள் ஊடாக மாணவர்கள் தேர்தெடுக்கப்பட்டு, இந்த புலமைபரிசில் வழங்கப்படுகின்றது. நிறுவனங்களைச் சேர்ந்தவர்களால் வழங்கப்படும் இந்த உதவியானது, மாணவர்களின் கல்விச் செயற்பாட்டுக்காக மாதாந்தம் வழங்கப்படும்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்டச் செயலாளர் வேதநாயகன் கலந்துகொண்டு மாணவர்களுக்கான புலமைப்பரிசில்களை வழங்கி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .