2025 ஜூலை 02, புதன்கிழமை

திருட்டு மின்சாரம் பெற்றவர் இழப்பீடு கட்டினார்

Thipaan   / 2015 ஒக்டோபர் 24 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

கொடிகாமம், வரணி, மாசேரி பகுதியில் திருட்டு மின்சாரம் பெற்றவரை, 82 ஆயிரத்து 947 ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக இலங்கை மின்சார சபைக்குச் செலுத்துமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் செ.கணபதிப்பிள்ளை, வெள்ளிக்கிழமை (23) தீர்ப்பளித்தார்.

அத்துடன், குற்றவாளிக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதவான் தீர்ப்பளித்தார்.

கொடிகாமம் பொலிஸாரும் மின்சார சபை புலனாய்வு அதிகாரிகளும் இணைந்து கடந்த மாதம் நடத்திய சோதனை நடவடிக்கையில் மேற்படி நபர் கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .