2025 ஜூலை 19, சனிக்கிழமை

நடுவில் ஒரு பக்கத்தைக் காணோம்

Niroshini   / 2016 ஜனவரி 12 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வடமாகாண சபையின் சுகாதார அமைச்சின் நியதிச் சட்டத்தில், உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கோவையில் ஒரு பக்கம் தவறவிடப்பட்டிருந்தது.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு  செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்றது. இதன்போது, வடமாகாண சுகாதார அமைச்சின் நியதிச் சட்டம் தொடர்பில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, ஒரு பக்கத்தைக் காணவில்லையென உறுப்பினர்கள், கேள்விகேட்ட போது, தவறுதலாக அது கோவைக்குள் வரவில்லையெனக் கூறப்பட்டு, விடுபட்ட பக்கம் தனியாக அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X