Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Princiya Dixci / 2015 செப்டெம்பர் 02 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-குணசேகரன் சுரேன்
நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா காலத்தில் ஆலயத்தின் வெளி வீதியைச் சுற்றி யாழ்;ப்பாணம் மாநகர சபையால் கொட்டப்படும் மணல் போதுமாக இல்லையென அடியவர்கள் தெரிவித்திருந்த நிலையில், அங்கு மேலும் மணல் கொட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகக்கூறிய பலரும் இன்னமும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை.
யாழ்.மாநகர சபையால் வழமையாக 250 கியூப் மணல் கொட்டப்படும் நிலையில் இம்முறை யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாட்டின் காரணமாக மாநகர சபையால் 50 கியூப் மணல் மாத்திரம் கொட்டப்பட்டதாக மாநகர சபையின் முன்னாள் ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் தெரிவித்தார்.
பிரதட்டை நேர்த்திக்கடன் செய்பவர்களுக்கு இந்த மணல் போதுமானதாக இல்லையெனவும் மேலதிகமாக மணல் கொட்டப்படவேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
மேலதிக மணல் கொட்டப்படுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்ததுடன், இது தொடர்பில் யாழ்.மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகனுடமும் உரையாடுவதாக கூறியிருந்தார்.
மேலும், நேற்று செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்ற வடமாகாண சபை அமர்வின் போது, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தைச் சுற்றி மேலதிக மணல் கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பில் யாழ்.மாவட்டச் செயலாளருடன் கதைப்பதாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்திருந்தார்.
25 திருவிழா நாட்களில் இன்று புதன்கிழமை (02) 15ஆம் திருவிழா நடைபெறுகின்ற நிலையில் இன்னமும் மேலதிக மணல் கொட்டப்படவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
24 minute ago
28 minute ago