2025 ஜூலை 19, சனிக்கிழமை

நெடுந்தீவு கடற்பரப்பில் மூன்று இந்திய மீனவர்கள் கைது

Niroshini   / 2016 ஜனவரி 17 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று இந்திய மீனவர்களை கடற்படையினர், நெடுந்தீவு கடற்பரப்பினுள் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்துள்ளதாக கடற்றொழில் நீரியல் வளதுறை திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப்பணிப்பாளர் ப.ரமேஸ்கண்ணா தெரிவித்தார்.

கோட்டைப்பட்டிணம், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து விசைப் படகில் வந்த குறித்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதோ கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராமையா பாலசுப்பிரமணியம் (வயது 33), கலைஞன் சந்தோஸ்குமார் (வயது 28), சந்திரன் பார்த்தீபன் (வயது 19) ஆகிய மூவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை கடற்படையினரிடம் இருந்து பொறுப்பேற்றுகொண்ட நீரியல் வளதுறை அதிகாரிகள், ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X