2025 ஜூன் 25, புதன்கிழமை

நெடுந்தீவு மீனவர்கள் போராட்டம்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 15 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய எரிபொருளுக்கு பதிலாக மீன்பிடி உபகரணங்களை வழங்குமாறு கோரி, யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களம் முன்பாக நெடுந்தீவு மீனவர்கள், இன்று செவ்வாய்க்கிழமை (15) போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கடந்த காலத்தில் மீனவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மானிய எரிபொருள் நிறுத்தப்பட்டு, அதற்குப் பதிலாக மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

நெடுந்தீவில் சுமார் 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ள நிலையில் இந்த உபகரணங்கள் 17 மீனவர்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மிகுதிப் பேருக்கு வழங்குமாறு கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்னும் ஒரு மாத காலத்துக்குள் மிகுதி மீனவர்களின் உபகரணங்களும் வழங்கப்படவேண்டும் எனவும் இல்லையேல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்படும் எனவும் மீனவர்கள் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .